புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைக்குடிப்பட்டி சீத்தமேடு செல்லும் சாலையில் மின்கம்பம் ஒன்று பழுதடைந்து உள்ளது. இது எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பலத்த காற்று வீசும்போது மின் கம்பம் உடைந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.