புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, மலைக்குடிப்பட்டி சீதமேடு செல்லும் சாலையில் குறுக்கே அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இப்ப விழுமோ?எப்ப விழுமோ? என்ற நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.