உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-09-11 12:14 GMT

அரியலூர் பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில் ஒரே வளாகத்தில் போலீஸ் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், சார் நிலை கருவூலம், தீயணைப்பு நிலையம், கிளை சிறை மற்றும் ஆவின் பாலகம் ஆகியவைகள் செயல் பட்டு வருகிறது. மேற்சொன்ன அலுவலகங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் இரவு நேரங்களில் மிகுந்த இருளில் சிக்கி தவிக்கிறது. போதிய வெளிச்சம் இல்லை. அங்கு இருக்கும் மின்கம்பத்தில் தெரு விளக்கோ அல்லது உயர் மின் கோபுரம் இல்லை. பொதுமக்கள் இரவு நேரங்களில் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் பொதுமக்களும், கைதிகளை கைது செய்து அரியலூர் கிளை சிறையில் ஒப்படைக்கும் போலீசார்கள் இருளை கடந்து தான் செல்கின்றனர். இந்த அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. மேலும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரிகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்புறம் உயர் மின்கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்