ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-12 15:45 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சாம்பட்டிசாம்பட்டியில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் நுழைவுவாயில் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்