ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட ஏ.கே.எஸ். தோப்பு முல்லைநகர் முனைக்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த அழுத்ததில் மின்சாரமானது வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறாார்கள். எனவே அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.