மதுரை சிந்தாமணி ரோடு சூசையப்பர்புரம் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சமடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.