விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள சாமிபுரம் காலனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அதன் பயனாக அந்த பகுதியில் புதிய மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.