எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2022-09-03 14:41 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் வடநகர் செல்லும் சாலை ஓரத்தில் புதிய பஸ் நிலையத்தின் கீழ்புரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்