`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-01 13:15 GMT
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெட்டவாய்த்தலை ஊராட்சியில் 4, 5-வது வார்டுகளில் சில நாட்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் பழுதான தெருவிளக்குகளை சரிசெய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி' புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்