ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-09-01 12:55 GMT

பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-1) பெருங்கரை பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பெரும்பாலும் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியே இரவில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்