சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி 24-வது வார்டு புவன கணபதி கோவில் தெரு பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் எரிய செய்ய வேண்டும்.