சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-07-10 12:16 GMT

நாகர்கோவில் கோட்டார் பெரியவிளையில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் முன் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வண்ணம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் சமபந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்