தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கந்தபுரம் மேலத்தெருவில் உடையார் சுவாமி கோவில் செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. கீழ்பகுதியில் இருந்து மேல்பகுதி வரை சிமெண்டு பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது. வேகமாக காற்று வீசும்போது மின்கம்பம் அங்கும், இங்கும் ஆடுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.