நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி-நாகூர் சாலையில் டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பிகளில் மரக்கிளைகள் படர்ந்து உள்ளது.இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் .என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்