மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-08-23 12:20 GMT

நெகமம் அருகே மெட்டுவாவி கிராமத்தில் சாலையோரத்தில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று நிற்கிறது. அந்த சிமெண்டு மின்கம்பத்தில் பாதியளவிற்கு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளன. இதனால் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. மேலும் வலுவிழந்த நிலையில் மின்கம்பம் காட்சியளிக்கிறது. பலத்த காற்று வீசும்போது எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடலாம். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன், அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்