உயர்மின்கோபுர விளக்குகள் வேண்டும்

Update: 2022-08-22 15:27 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா வடபாதிமங்கலத்தில் உள்ள புனவாசல் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே கடைவீதி, பஸ்நிறுத்தம், ஆறு, ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த நிலையில் பாலம் உள்ள ப குதியில் முறையான மின்விளக்கு வசதி இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உயர்மின்கோபுர விளக்கு அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்