மின்கம்பிகள் ஓரமாக ஒதுக்கி அமைக்கப்படுமா?

Update: 2022-12-04 11:53 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதில் தினமும் பயணிகள் பலர் காத்திருந்து வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, படவேடு செல்லும் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். நிழற்கூடம் பின்பக்கம் உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் செய்யாமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் தகர ஷீட்டுகள் கொண்ட நிழற்கூடம் மேலே திடீரென உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தால், அதனுள்ளே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்கூடம் மேலே செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை ஓரமாக ஒதுக்கி அமைக்க வேண்டும்.

-கார்த்திகேயன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்