Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Sep 2024 5:19 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50218

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, ஏர்கோல்பட்டியில், 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தெருக்களில் சாக்கடை நீர் ஆறுபோல் ஓடுகிறது. ஆங்காங்கே சாக்கடை நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும். -மணிகண்டன், செல்ல முடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:17 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50217

பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்

மற்றவை

ஏரியூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பள்ளி கல்லூரிகளுக்காக மாணவ-மாணவிகளும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகவும் இந்த பஸ் நிைலயத்திற்கு வருகிறார்்கள். ஆனால் இங்குள்ள கழிவறை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். பஸ் நிலைய சுற்றுவட்டார பகுதிகளிலும், தடுப்புச் சுவர்களிலும் ஆண்கள் சிறுநீர் கழிக்கின்றனர். இதன் காரணமாக பஸ் நிலையம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கழிவறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:16 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#50215

நோய் அபாயம்

கழிவுநீர்

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது. கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை எடுத்துவிட்டு அந்த பைகளை சாக்கடை கால்வாயில் வீசி செல்கிறார்கள். இதனால் சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணப்படுகிறது. சாக்கடை செல்ல வழி இல்லாமல் அப்படியே தேங்கி நின்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாமே! -விஜயகுமார், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:14 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50212

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஏரிக்கடை அருகே பிரதான சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் குப்பைகளை ெகாட்ட குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. குப்பை தொட்டியில் குப்பைகள் அள்ளாததால் அவை மலைபோல் தேங்கி கிடக்கிறது. காற்றடிக்கும் போது குப்பைகள் சாலையில் சிதறி காணப்படுகிறது. அதனை நாய்கள் கிளறி விடுகின்றன. இதனால் குப்பைகளில் இருந்து சுகாதார சீர்ேகடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை தினமும் அள்ளி தூய்மையாக வைக்கக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனுசாமி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:13 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50211

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மூக்கண்டப்பள்ளியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெளியில் வர அச்சப்படுகிறார்கள். இரவு நேரத்தில் வேலை முடிந்து வாகனத்தில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். எனவே அந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா? -மாதேஷ், மூக்கண்டப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:12 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50209

நெடுஞ்சாலையில் திரியும் குரங்குகள்

மற்றவை

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி முன்பாக மேலுமலை உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதியில் தாழ்வான சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அந்த நேரம் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் குரங்குகள் இருப்பதால், விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சுற்றக்கூடிய குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:10 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50207

வாகனங்களால் அவதி

போக்குவரத்து

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய வளாகத்திற்குள் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பயணிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக டவுன் பஸ்கள் வரக்கூடிய பாதையில் இரு பகுதிகளிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் வர சிரமப்படுகின்றன. அந்த பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என்று காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து அதே இடத்தில் நிறுத்தப்படுகின்றன. எனவே பஸ் நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்களை நிறுத்த தடை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2024 5:09 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50206

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்ல கூடிய சாலையும், சூளகிரி நகர் மேம்பாலத்தையொட்டி உத்தனப்பள்ளி வரும் சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் சாலையோரமாக சாக்கடைக்காக குழி வெட்டப்பட்டு மண் குவியலாக பல மாதங்களாக போடப்பட்டுள்ளன. அவை அகற்றப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாலையை பார்வையிட்டு, சேதமடைந்த சாலையை சீர்செய்ய வேண்டும். மேலும் சாலையில் பல மாதங்களாக குவியலாக கிடக்கும் மணலை அப்புறப்படுத்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 6:10 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#50084

தடுப்புச் சுவர் அமைக்கலாமே!

சாலை

ஓமலூர் வட்டம், கரும்பாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் பாலத்தின் அடிபகுதியிலுள்ள 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.-இளங்கோவன், தே.கொல்லப்பட்டி,

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 6:19 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#50083

சேறும், சகதியுமான சாலை

சாலை

கன்னங்குறிச்சி-மன்னார்பாளையம் ஆகிய 2 ஊர்களை இணைக்கும் சாலை புதுஏரி சாலை. இந்த வழியாக தினசரி ஏராளமான பள்ளி, கல்லூரி வேன், காய்கறி வாகனங்கள் செல்கின்றன. தற்போது இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்தும், மேலும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்‌. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும். -காளிதாஸ், மன்னார்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 6:04 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#50082

தடுமாறும் வாகனங்கள்

சாலை

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரவுண்டனா முதல் பொன்னம்மாபேட்டை அய்யப்பன் கோவில் வரை உள்ள மெயின்ரோடு மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. இந்த பகுதியில் இதன் காரணமாக அதிக விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -கார்த்தி்க், அம்மாபேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 6:01 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#50081

ரவுண்டானா அமைக்க வேண்டும்

சாலை

ஓமலூர் தாசில்தார் அலுவலகத்தை அடுத்து மேச்சேரி பிரிவு ரோடு உள்ளது. இந்த இடத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த பிரிவு சாலையானது அதிக போக்குவரத்து மிகுந்த இடமாக உள்ளது. எனவே இந்த இடத்தில் சிறிய ரவுண்டானா அமைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் சாலை திசை காட்டி அறிவிப்பு எச்சரிக்கை பலகைகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிகுமரன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick