Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Feb 2025 7:06 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#53928

உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா?

மின்சாரம்

திருவண்ணாமலையில் வேங்கிக்கால் தென்றல் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில உள்ள உயர் கோபுர மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதி என்பது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். அதைக் கருத்தில் கொண்டு உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். - ராஜா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:04 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#53927

டிரைவர் இருக்கையில் அமர்ந்து பயணிகள் பயணம்

டிரைவர் இருக்கையில் அமர்ந்து பயணிகள் பயணம்போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா காஞ்சீபுரத்தில் இருந்து தூசி கிராமம் வழியாக மாங்கால் சிப்காட் பகுதிக்கு தொழிலாளர்கள் பலர் வருகிறார்கள். அவர்களில் சிலர் ஆட்டோக்களில் வந்து செல்கிறார்கள். ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாகப் பயணிகள், தொழிலாளர்களை ஏற்றுகிறார்கள். அதில், பெண்கள் ஆட்டோக்களில் டிரைவரின் இருக்கை, கம்பியில் அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்நாசர், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#53926

மயானத்துக்கு மின் விளக்கு வசதி

மயானத்துக்கு மின் விளக்கு வசதிமற்றவை

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கெனத் தனி மயானம் உள்ளது. அதில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. அதில் இருந்து ெவளியேறும் விஷ பூச்சிகள் சாலையை நோக்கி வருகின்றன. அங்கு ஒரு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா? -சென்ராயன், அக்ராபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 7:00 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#53925

நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?குப்பை

ஆரணி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட நகர எல்லையில் உள்ள காமராஜர் சிலை வளாகத்தில் நகராட்சி சார்பில் முறையாக பராமரிக்கப்படாததால், அந்தப் பகுதியில் குப்பைகளாகவும், மாடு கட்டும் இடமாகவும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் சுத்தமாக வைக்குமா? -ஜோதிராமலிங்கம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#53765

மூடப்பட்டுள்ள புதிய மேம்பாலம்

மூடப்பட்டுள்ள புதிய மேம்பாலம்சாலை

நாட்டறம்பள்ளி-திருப்பத்தூரை இணைக்கும் பிரதான சாலையில் மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளது. மேம்பாலம் தொடக்கத்தில் இரும்புத்தடுப்புகள் வைத்துள்ளனர். புதிய மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜியாவுதீன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 34
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:55 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#53762

நாய்கள் தொல்லை

மற்றவை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரை நகர், ஆசிரிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், குழந்தைகளையும் நாய்கள் ஓட ஓட விரட்டி கடிக்க பாய்கின்றன. எனவே மேற்கண்ட தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.சுரேஷ் பாபு, ஆசிரியர் நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#53761

கற்கள் பெயர்ந்த சாலை

கற்கள் பெயர்ந்த சாலைசாலை

ஜோலார்பேட்டை அருகே பெரியகம்பியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதிக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலையாக போட முன்வர வேண்டும். -சரவணன், அண்ணா நகர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:39 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#53759

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம் பகுதியில் இருந்து கிழக்குப் பஜார் தெரு, மேல்வன்னியர் தெரு, காந்தி சாலை, அண்ணா சாலை, பஸ் நிலையம், கருமாரியம்மன் கோவில் வரை சாலையின் இருபக்கமும் கடைகள் முன்னால் ஆக்கிரமித்து, இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து சாலையின் இரு பக்கமும் உள்ள ஆகிரப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:37 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#53758

நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்

நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

சோளிங்கரை அடுத்த கூடலூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அனைத்துக் குப்பைகளையும் நீர் நிலையான ஏரி பகுதியில் கொட்டி மாசுப்படுத்துகின்றனர். எனவே ஏரிக்கரையோரம் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். -அர்ச்சுனன், கூடலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:34 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#53757

கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

ஆற்காடு கொசத்தெரு செல்லும் சாலையில் நகைக்கடைகளை ஒட்டி உள்ள கால்வாய், தூர்ந்துபோய் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துக்குமரன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53756

தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகள்

குப்பை

ராணிப்பேட்டையை அடுத்த வன்னிவேடு, தேவதானம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருபக்கமும் ஏராளமான குப்பைகள் கிடக்கின்றன. அந்தக் குப்பைகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திகேயன், வன்னிவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 7:28 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#53755

மேம்பாலத்தில் வளர்ந்த செடிகள்

மேம்பாலத்தில் வளர்ந்த செடிகள்சாலை

சோளிங்கர்-திருத்தணி சாலையில் நந்தியாற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. அந்தப் பாலம் வழியாக சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை, திருத்தணி, நகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். மேம்பாலத்தின் பக்கவாட்டில் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படலாம். நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டாமல் விரைவில் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். -கிருஷ்ணராஜ், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick