Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 May 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#55908

நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?சாலை

கே.வி.குப்பத்தை அடுத்த கோவிந்தாபுரம், சேத்துவண்டை ஊராட்சிகள் சந்திக்கும் பகுதியில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை பிரியும் பகுதியில் புதிய சாலைக்கும், பழைய சாலைக்கும் இடைப்பட்ட குறுகிய தூரம் ஜல்லிக் குவியல்களை கொண்டு பரப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை ஜல்லிகள் பதம் பார்க்கின்றன. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:38 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#55907

காந்திநகருக்குள் பஸ்கள் வந்து செல்லுமா?

போக்குவரத்து

காட்பாடி-பாகாயம் இடையே செல்லும் டவுன் பஸ்களான 1, 2 ஆகியவை ஓடைப்பிள்ளையார் கோவில் எதிரில் உள்ளே காந்திநகருக்குள் வந்து செல்வது வழக்கம். ஆனால், ஒரு சில தனியார் பஸ்கள் சமீப காலமாக காந்திநகருக்குள் வருவது இல்லை. நேராகச் சென்று விடுகின்றன. இதனால், பஸ் பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்க எடுப்பார்களா? -ராஜவேங்கை, காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55906

வீடுகளில் புகும் கழிவுநீர்

வீடுகளில் புகும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் ஓல்டு டவுன் அருகே குட்டைமேடு பகுதியில் தோல் கிடங்கு தெருவில் கழிவுநீர் வடியாமல் ஆண்டு கணக்கில் தேங்கி நிற்கிறது. சில வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள சுகாதாரச் சீர்கேட்டை போக்க, கழிவுநீரை வடிய வைக்க கால்வாயைத் தூர்வார வேண்டும். -ஆர்.வி. வேலன், குட்டைமேடு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55905

உடைந்த கால்வாய் சிமெண்டு சிலாப்

உடைந்த கால்வாய் சிமெண்டு சிலாப்கழிவுநீர்

வேலூர் சங்கரன்பாளையம் வ.உ.சி. நகர் துணை அஞ்சல் அலுவலகம் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவராமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:49 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55748

விபத்தை தடுக்க நடவடிக்கை

மற்றவை

அரக்கோணம்-திருத்தணி, காஞ்சீபுரம்-சோளிங்கர் ஆகிய பிரதான சாலைகளில் சென்டர் மீடியன் முற்றிலும் தெரியாத வகையில் அழிந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சென்டர் மீடியன் மற்றும் பிரதிபலிப்பான்களை புதுப்பித்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - சீனிவாசன். அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 56
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:47 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55747

தோண்டிய பள்ளத்தை முறையாக மூடுவார்களா?

தோண்டிய பள்ளத்தை முறையாக மூடுவார்களா?சாலை

அரக்கோணம் பஜார் தெருவில் வீடுகளின் பாதாள சாக்கடை இணைப்புக்காக எடுக்கப்பட்ட பள்ளம் பல மாதங்களாகச் சரியாக சமன் செய்யாததால் மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்களும், நடந்து செல்லும் முதியோர்களும் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தோண்டிய பள்ளத்தைச் முறையாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோகுல கிருஷ்ணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55746

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் அம்மூர் செல்லும் ரோட்டில் 2 மதுபானக் கடைகள் உள்ளன. இங்கு மது வாங்குபவர்கள் மற்றும் ரோட்டிலேயே குடிப்பவர்கள் பாதி ரோடு வரை இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் இரவில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரைசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 19
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:50 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55745

ஏரிப்பாதை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்

ஏரிப்பாதை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்சாலை

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனந்தலை, செங்காடு மோட்டூர், வள்ளுவம்பாக்கம், படியம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு செல்லும் பிரதான வழியை சிலர் ஆக்கிரமித்து, கட்டுமானப் பணிகளை செய்ய முயன்று வருகின்றனர். இதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். -குப்புசாமி, அம்மூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:37 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55744

குடிநீர் சப்ளை செய்யப்படுமா?

தண்ணீர்

வாலாஜாபேட்டை கீழ் படவேட்டம்மன் கோவில் தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தத் தெரு மக்களுக்கு கடந்த ஒரு மாதமாகக் குடிநீர் சப்ளை செய்யவில்லை. வெயில் காலத்தில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி வாலாஜா நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்வார்களா? -மதியழகன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55743

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூபாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55742

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலை

திருப்பத்தூர் கச்சேரி தெரு பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 April 2025 8:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55741

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ஆண்டியப்பனூர் அருகே ஆங்காங்கே சாலையோரம் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைக்கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இல்லையேல், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்ராஜ், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick