Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2025 5:38 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57911

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரேம், கதிரம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:36 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#57910

புதிய அங்கன்வாடி மையம் கட்டுவது எப்போது?

மற்றவை

ஜோலார்பேட்டை ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டுவதாகக் கூறினார்கள். கட்டிடத்தை இடித்து 8 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை கட்டிடம் கட்டவில்லை. குழந்தைகள் அங்குள்ள மரத்தடியிலும், திறந்த வெளியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். -வே.ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், அடியத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57909

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

திருப்பத்தூர் அருகே புதுக்கோட்டை ஊராட்சி துரைசாமி வட்டம் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -கருணாகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57907

பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் அருகே பெரியகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் இருபுறம் மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதை முழுவதும் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, பெரியகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57905

சாலையோரம் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே குனிச்சி பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கல்யாண்குமார், குனிச்சி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57903

உள்வாங்கிய சாலை

உள்வாங்கிய சாலைசாலை

வேலூர் சத்துவாச்சாரியில் கோர்ட்டு அருகில், மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகம் செல்லும் 4- வது மெயின் ரோடு உள்ளது. கோர்ட்டு மற்றும் ஆவின் பால் நிறுவனத்துக்கு இடையே உள்ள ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு இரண்டு இடங்களில் சாலை உள்வாங்கி உள்ளது. ஏற்கனவே ஒருமுறை இந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டது. அந்த இடத்தில் ஜல்லிக்கற்கள் போட்டு மூடினர். தற்போது மீண்டும் இதே இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தற்காலிகமாக அந்த இடத்தில் தடுப்புகளை வைத்து எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:26 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#57901

சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்சாலை

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த அன்னங்குடி கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோவில் எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சாலையில் மழை வரும்போதெல்லாம் ஒரு அடி உயரத்துக்குமேல் மழைநீர் தேங்கும் அவலம் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையின் இருபக்கமும் மழைநீர் வழிந்தோட கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -கஜேந்திரன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57900

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

வேலூர் சத்துவாச்சாரி சவுத் அவென்யூ சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி எதிரே சாலையோரம் பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தால் இரவில் நடந்து செல்லும் பொதுமக்களும், அதிகாலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட ஏற்பாடு செய்ய வேண்டும். -கந்தசாமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57899

கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்

கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையோரம் நிக்கல்சன் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர் சீராகச் செல்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும். -ரங்கசாமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:19 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57898

கலெக்டர் அலுவலகத்தில் நாய்கள் தொல்லை

கலெக்டர் அலுவலகத்தில் நாய்கள் தொல்லைமற்றவை

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஓரிரு நாய்கள் மாடி பகுதிக்கு சென்று ஓய்வெடுக்கின்றன. நாய்களால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:16 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#57897

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள வள்ளலார் நகர் போகும் சாலையில் மிக மோசமாக பழுதடைந்த நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்தக் கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். -அப்துல்சமது, தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:12 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#57895

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா?

மற்றவை

போளூரை அடுத்த ஆலபூண்டி கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் நிலைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். போளூர் வருவாய்த்துறையினர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணன், போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick