சீராக தண்ணீர் வினியோகம் செய்வார்களா?

Update: 2023-07-23 12:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் வி.சி.மோட்டூர் ஊராட்சி 4-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் பொதுக்கிணறு மோட்டாரின் மின் இணைப்பு ஒயர் அறுந்து கீழே தொங்கியது. அதிகாரிகள் அதனை சரி செய்யாமல் ஒயரை துண்டித்து விட்டனர். இதனால் தற்போது தண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது. மின் இணைப்பை சரி செய்து சீராக தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மு.மணி, வி.சி.மோட்டூர். 

மேலும் செய்திகள்