சிறு மின் விசை தொட்டியை சீரமைப்பார்களா?

Update: 2022-08-13 12:37 GMT

ஆரணி 4-வது வார்டு புதுகாமூர் பகுதியில் புத்திரகாமேடீஸ்வரர் கோவில் அருகில் மயானப் பாதைக்கு செல்லும் வழியில் உள்ள மீட்டர் ெபட்டி, மின் மோட்டார் பழுதடைந்தது. அவற்றை நகராட்சி பொறியாளர் பிரிவு ஊழியர்கள் கழிட்டி சென்று பல மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் இன்னும் வந்து பொருத்தவில்லை. பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக சிறு மின் விசை தொட்டியை சீரமைக்க வேண்டும்.

விஜயபாரதி, ஆரணி 

மேலும் செய்திகள்