குடிநீர் கிணறுக்கு மூடி போடுவார்களா?

Update: 2023-01-22 16:35 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி. ஏரி அருகே குடிநீர் கிணறு உள்ளது. அதில் இருந்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் குடிநீர் கிணறு இருப்பதால் அசுத்தம் அடைகிறது. குப்பைகள் பறந்து வந்து கிணற்றில் விழுகிறது. குடிநீர் மாசு அடைகிறது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீர் கிணறுக்கு மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகன், கல்லேரி.

மேலும் செய்திகள்