புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவார்களா?

Update: 2023-05-21 12:53 GMT

கலசபாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் கொசத்தெரு, கம்மாளத்தெரு, கோமுட்டித்தெரு, புதுத்தெரு ஆகியவற்றுக்கு சரியான முறையில் குடிநீர் வருவது இல்லை. எனவே முத்து விநாயகர் கோவில் அல்லது புதுத்தெரு பொதுக்கிணறு அருகில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டினால் அனைத்துத்தெரு மக்களும் பயன்அடைவார்கள். ஊரக வளர்ச்சித்திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவார்களா?

-ஆர்.ஜெகன்நாதன், கடலாடி.

மேலும் செய்திகள்