திருப்பத்தூர் தாலுகா கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவ்வாத்தூர் ஊராட்சியில் உள்ள புதூர் காலனியில் புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புதிதாக கட்டப்பட்டு முடிவடைந்த நிலையில் உள்ளது. ஆனால், குடிநீர் தொட்டிக்கு நீரேற்றுவதற்காக மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் புதிய குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.