வீணாகும் குடிநீர்

Update: 2023-06-07 17:11 GMT

வீணாகும் குடிநீர்

கோடை காலம் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மிலிட்டரி காலனி இரண்டாவது வீதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக குழாய் உடைப்பை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

- வின்சென்ட் ராஜ் திருப்பூர்

மேலும் செய்திகள்