குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-01-18 12:25 GMT

வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் தபால் அலுவலக தெருவில் ஒரு மாதத்துக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டினார்கள். பள்ளம் தோண்டும்போதும் குடிநீர் குழாய் சேதம் அடைந்து விட்டது. குடிநீர் வினியோகிக்கும்போது குழாய் உடைப்பில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அந்த இடத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சேறும் சகதியுமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

-அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம். 

மேலும் செய்திகள்