ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-05-14 15:46 GMT

ஆபத்தான குடிநீர் தொட்டி

தாராபுரம் நகராட்சி 1-வது வார்டு காமராஜபுரம் கொடிக்கம்பம் வீதியில் உள்ள போர் குடிநீர் தொட்டி (வாட்டர் டேங்க்) சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அந்த பகுதியில் பாசி பிடித்து உள்ளதால் தண்ணீர் பிடிக்க செல்வதில் சிரமம் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக ஆபத்தான குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு மாற்றாக புதிதாக 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கவேண்டும். மேற்கே வரை குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தால் பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை குறையும். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பி.சி.சஞ்சய் கண்ணன், தாராபுரம்.

மேலும் செய்திகள்