ஆழ்குழாய் கிணறால் இடையூறு

Update: 2023-01-22 15:17 GMT

ஆழ்குழாய் கிணறால் இடையூறு

 திருப்பூர் 4-வது வார்டு விக்னேஸ்வரா நகர் 8-வது வீதியில் ஆழ்குழாய் கிணறு உள்ளது. இது போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையின் நடுவல் உள்ளதால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதுடன், பாதசாரிகளுக்கும் தொந்தரவாக உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதியினர் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இடையூறாக உள்ள இந்த ஆழ்குழாய் கிணறை அகற்ற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-அப்துல்ரகுமான், திருப்பூர்.

மேலும் செய்திகள்