குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2022-12-21 18:09 GMT

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

திருப்பூர் கோவில்வழி பிள்ளையார் நகர் பகுதியில் குடிநீர் குழாய் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அந்த பகுதியில் ஏற்கனவே குடிநீர் வினியோகிக்கும்போது அழுத்தம் குறைந்த அளவில் தண்ணீர் வருவதாகவும், தற்போது இதுபோன்ற குழாய் உடைப்புகளால் தண்ணீர் உரிய அளவு கிடைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சரி செய்து தங்களுக்கு உரிய அளவு தண்ணீர் கிடைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராஜ், திருப்பூர்.

மேலும் செய்திகள்