மழைநீர் தேங்கும் அவலம்

Update: 2023-10-01 17:14 GMT

வந்தவாசி தாலுகா அலுவலக ரோட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பாக மழைநீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. அங்கு மகளிர் காவல் நிலையம், தாலுகா அலுவலகம், தெற்கு காவல் நிலையம் போன்றவை உள்ளன. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தேங்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.எம்.ஆனந்தன், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும் செய்திகள்