தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-08-17 11:04 GMT

ஆரணி ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் சிறு பாலம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டபோது, அருகில் இருந்த ஆழ்துளை கிணறு அடிபம்பு அகற்றாமல் அப்படியே சிறு பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி ெவளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நகராட்சி பொறியாளர் பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அடிபம்பை கழட்டி விட்டு, குழாயில் மேலே கருங்கல்லை மட்டும் வைத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.

குணாளன், ஆரணி 

மேலும் செய்திகள்