சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

Update: 2022-08-21 09:49 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வன்னிவேடு ரபிநகர்-1 பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சீராக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் சரியாக கிடைப்பது இல்லை. ஆகையால் நாங்கள் பஞ்சாயத்து வினியோகிக்கும் நீரை மட்டுமே நம்பி இருக்கிறோம். குடிநீர் வினியோகம் செய்யும்போது எங்கள் பகுதிக்கு சரியாக குடிநீர் வருவது இல்லை. குடிநீர் குழாயை திறக்கும்போது, அதில் இருந்து காற்று தான் வருகிறது. குடிநீர் வருவது இல்லை. பஞ்சாயத்து நிர்வாகம் எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ராஜேஷ் வன்னிவேடு 


மேலும் செய்திகள்