குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கின்றன. எனவே ெநடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் தேங்கும் மழைநீரை அருகில் வடிய வைக்க வேண்டும்.
-டி.ஜோதிகணேசன், வளத்தூர்.