திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் உள்ள ஏரியில் கழிவுநீர் கலந்து மிகுந்த மாசடைந்த நிலையில் உள்ளது. இந்த ஏரி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் சமீப காலமாக இந்த ஏரியில் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் கலந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை சுத்தம் செய்யவேண்டும்.