குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-05-17 13:12 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகதஅள்ளி ஊராட்சி ஹவுசிங் போர்டு கடமடை குடியிருப்புக்கு வரும் குடிநீர் குழாய் வாரம் ஒரு முறை உடைந்துவிடுகிறது. இதனால் அப்பகுதிக்கு தண்ணீர் வருவது இல்லை. கடந்த வாரம் 4 நாட்கள் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்குமோ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்