பல்லவன் குளம் தூய்மைப்படுத்தப்படுமா?

Update: 2026-06-28 11:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பல்லவன் குளம் வடகரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், படித்துறைகளில் முட்புதர்கள் மண்டியுள்ளதால் குளத்துத் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள், பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் சுகாதார சீர்கேட்டாலும், தொற்றுநோய் அபாயத்தாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்குள்ள குப்பைகளையும், முட்புதர்களையும் முழுமையாக அப்புறப்படுத்தி குளத்தை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்