மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்

Update: 2022-08-05 09:51 GMT

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் இனாம்காரியந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட தீபநகர் மேற்கு பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் புதிதாக சிறிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அது, உயரமாக உள்ளதால் சாலையில் இருந்து வரும் மழை தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாமல் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், இனாம்காரியந்தல்

மேலும் செய்திகள்