சேலம் குகை 47-வது வார்டு சிங்காரப்பேட்டை தெற்கு தெருவில் கடந்த மாதம் புதிய சாக்கடை கால்வாய் பணிகளை மேற்கொண்டனர். இதற்கான பணியின் போது பழைய குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தனர். ஆனால் தண்ணீர் வரும்போது குழாய்களில் நீர் கசிவு ஏற்படுவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து பழுதடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.