ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2026-08-30 13:34 GMT

பரமத்திவேலூர் அருகே அ.குன்னத்தூர் ஊராட்சியில் உள்ள அய்யம்பாளையம் ராஜ வாய்க்காலின் கரையோரத்தில் சிமெண்ட் குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மின்மோட்டார் பம்ப் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் தொட்டி மேல்பகுதி மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் காற்றில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பறந்து குடிநீர் தொட்டிக்குள் விழுகின்றன. இதன்காரணமாக குடிநீர் மாசுடைகிறது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் தொட்டியின் மேல்பகுதியை மூடுவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்