சங்ககிரி தாலுகா இடங்கணசாலை நகராட்சி பகுதிக்குட்பட்ட நாப்பாளையம் விநாயகர் கோவில் தெருவில் சாலை மிகவும் சேதம் அடைந்து மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சேதமான சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் எப்போதுதான் நடவடிக்கை எடுப்பார்களோ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.