குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-08-23 13:19 GMT

பென்னாகரம் பேரூராட்சி 1-வது வார்டு நீர்குந்தி பாளையங்குட்டை பகுதிக்கு நீர்குந்தியில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் பேரூராட்சி நிர்வாகம் பொறுப்பற்ற நிலையால் பாளையங்குட்டை பகுதிக்கு சரிவர தண்ணீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்