கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் ராமகவுண்டன்புதூர் பகுதியில் கடந்த 25 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி தினமும் தங்குதடை இன்றி குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.