சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் தாலுகா 8-வது வார்டு காளியம்மன் கோவில் தெரு பகுதியில் சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி சிரமப்படுகின்றனர். மேலும் சிலர் வெளியே பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?