தஞ்சை மாவட்டம் பாபநாசம் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதமாக குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை இல்லை . எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பாபநாசம்