வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ.சவுதாபுரத்தில் சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் நீர் மாசுபடுகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடி குத்தகை ஏலம் விடப்படாமல் எந்த ஏரி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து ஏரியை தூர்வாரவும், மீன்பிடி குத்தகை விடவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.