குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-05-10 14:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி பகுதி மக்களுக்கு அக்னி ஆற்று நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பகுதி வாரியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் என காலையில் ஒரு மணி நேரம் குடிநீர் வழங்கப்படும். ஆனால் சமீப காலமாக அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்படுவதாக கூறி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சீரான குடிநீர் வினியோகத்தை பேரூராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்