கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் நன்செய் புகழூர் ஊராட்சிக்கு உட்பட்ட தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் கதவணை பணிக்காக கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற போது தவுட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு நாட்களாக போதிய குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.