தடுப்பணை சேதம்

Update: 2026-05-10 10:21 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைகொல்லியில் தடுப்பணை ஒன்று உள்ளது. இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீரை விவசாயம் உள்பட பல்வேறு தேவைகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த தடுப்பணை ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வெறியேறி வீணாகி வருகிறது. இதன் காரணமாக போதிய அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடிவது இல்லை. எனவே அந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்